திங்கள், 31 ஆகஸ்ட், 2020

அவ்ளோதான் இந்தியா!

 மக்களை விட கடவுள் பெருசு என்று பேசுகிற நாடுதானே இது?

தாழ்த்தப்பட்ட தலீத்தைவிட பூனூல் அணிந்த பிராமணனே பெருசு என்று பீத்துகிற தேசந்தானே இது?

--

 சரி, உங்கள் நியாயப்படியே வருகிறேன். பாரத மாதா என்று பன்பெருங்காலமாக கட்டிக் காப்பாற்றிய உங்கள் ஹிந்து தேசம் அவமதிப்பிற்கு உள்ளாவதை விடவா இந்திய நீதித்துறை உங்களுக்குப் பெரிதாகிவிடப் போகிறது?


1971-ம் ஆண்டில் இயற்றப்பட்ட The Prevention Of Insults To National Honour Act-ன் படி, இந்திய தேசியக் கொடியின் மாண்பை தவறாகச் சித்தரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. குற்றமிழைத்தவருக்கு குறைந்தது ஓராண்டு காலமாவது சிறைத்தண்டனை அளிக்க, அச்சட்டம் வழிவகுக்கிறது.


இந்திய என்பது பொதுவுடைமைச் சொத்து. அது, இந்தியர் அனைவருக்கும் உடைமையாகுகிற திடப்பொருள். 


நம் தாய் தந்தையிரை யாராவது பழித்தால் வேறு யாராவது வந்து அவரை அடிப்பார் என்று கைக்கட்டிப் பார்ப்போமா, என்ன? பொளீர்..'ன்று கண்ணத்தில் நான்கு விரல்களையும் பதிக்கமாட்டோம்?


இந்திய குடிமக்களுடைய அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனாகத் திகழும் உச்சநீதிமன்றம், அஃதே இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றான Abide by the Indian Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem-ற்கு எதாவது ஒரு தீங்கு ஏற்படும் போது தானே முன்வந்து தேசிய முக்கிய வழக்காக எடுத்துரைக்காதா? 


நீதியரசர் பாப்டே பா.ஜ.க பிரமுகரின் பைக் மீதேறி பயணம் செய்கிறாரே, ஹெல்மெட்டாவது போட்டுக்கொள்ளக் கூடாது? என்று நன்னடைத்தையின் அடிப்படையில் பிரசாந்த் பூஷன் சொன்ன அறிவுரையை நீதிமன்ற அவமதிப்பாக, தாமே முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம்...


அதே தேசபக்தியை, அதே கோபத்தை, அதே வெறுப்புணர்வை கொஞ்சமாவது தேசியக் கொடியை அவமதிக்கும் பாசிச பா.ஜ.க கும்பல் மீது காட்டியிருக்க வேண்டாமா?


மன்னிப்பு கேளுங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பூஷனை வற்புறுத்துகிறார்கள். ஏன் என்று கேட்கிறார் அவர். நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்று பதில் வருகிறது. இல்லை.! நான் என்‌ மனச்சாட்சிக்கு உட்பட்டுத்தான் பேசியிருக்கிறேன் என்கிறார் இவர்.


ஒரு ரூபாய் அபராதம் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் அவரை கண்டிக்கிறது. தண்டனைத் தொகை 2000 என்று சட்டத்தில் இருக்கையில் ஒரு ரூபாய் என்ன? செத்துப்போன நீதித்துறைக்கு பிரசாந்த் பூஷனையே நெத்திக்காசு ஒட்டுச்சொல்லுகிறதா உச்சநீதிமன்றம்? 


மறுமுனை.. 

பாரதத்தின் அடையாளக் கொடிக்கு புதுவிதமான‌ விளக்கத்தை அளந்துவிட்ட எஸ்.வி.சேகரிடம் போலீசு கெஞ்சுகிறது, மன்னிப்பு மட்டும் கேளு சேகரு ப்ளீஸ்.. உன்னை கைதுலாம் பண்ண மாட்டேன். அவ்ளோதான்!

அவ்ளோதான் இந்தியா! 


தனிமனிதனை விட தேசம் பெரிது என்பார்கள், அந்தத் தனிமனிதன் தலீத்தாக இருக்கும் வரை.


தேசத்தைவிட தனிமனிதன் பெரிது என்பார்கள், அந்தத் தனிமனிதன் பிராமணனாக இருக்கும் வரை.


நீதித்துறையின் நடுவெலும்பை, தட்டித் தட்டியே நொறுக்கிவிட்டார்கள்.




கருத்துகள் இல்லை:

அவ்ளோதான் இந்தியா!

 மக்களை விட கடவுள் பெருசு என்று பேசுகிற நாடுதானே இது? தாழ்த்தப்பட்ட தலீத்தைவிட பூனூல் அணிந்த பிராமணனே பெருசு என்று பீத்துகிற தேசந்தானே இது? ...