#Comrade_talk #Must_read #கம்யூனிச_நாய்கள்
• கம்யூனிசத்தால் தான் கம்யூனல் பிரச்சனை எல்லாம் உருவாகுது!
• இந்தக் கம்யூனிச பதர்களுக்கு எப்போதும் போராடுவதேதான் வேலை!
• எந்தவொரு ஆக்கப்பூர்வ திட்டங்களுக்கும் முட்டுக்கட்டைப் போடுவதில்தான் இவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்!
-----
பெரும்பாலும் இஸ்லாத் மத பின்பற்றுநர்களை மதரீதியாகவும், பெண் பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரை சாதி ரீதியாகவும் அச்சுறுத்துகிற ஹிந்துத்துவ கும்பல் பொதுவுடைமை தோழர்களை இந்தவொரு வசை வார்த்தையில்தான் பந்தாடுகிறது.
இதை விளக்குவதற்கு, நம்மை நாய்களுடன் ஒப்பிட விரும்புகிறேன். நாய்களா என்று சிறுமை பட வேண்டாம். எந்தவொரு நாயும் தன்னை மனிதனுடன் ஒப்பிட்டுக்கொள்ள விரும்பவில்லை. அந்த அளவுக்கு நாய்களாலேயே தீண்டப்படாத ஜென்மங்களாகத்தான் மனிதர்களாகிய நாம் இருந்து வருகிறோம். இந்நிலையில் நாய்களுடன் ஒப்பிடுவதன் மூலமாக மனிதர்களுக்கு பெருமையே அன்றி சிறுமை அல்ல.
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு, சகல செல்வத்தையும் தன் கைப்பையில் வைத்து சுகபோக வாழ்க்கையை நடத்தி வருமிவர்கள், கிட்டத்தட்ட பங்களா வீட்டில் வசிக்கும் உயர் ரக நாய்கள். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள்.
ஏனென்றால் இவர்கள் கூட ஒரு காலத்தில் மத்திய மற்றும் கிழக்கு ஆசிய பகுதிகளினின்று நாடோடியாக வந்து சேர்ந்த வந்தேறிகள் தானே! இன்றோ, வேடிக்கையாக முசல்மான்களை வந்தேறிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது, இந்த வந்தேறிக் கூட்டம்.
உண்மையில் இந்தத் துணைக்கண்டத்தில் நடந்து வருவது வந்தேறிகளுக்கு இடையேயான வர்க்கப் போராட்டமே ஒழிய, தாய்வழி நிலச் சமூக மீட்புப் போராட்டம் அல்ல. காரல் மார்க்சு இந்தியாவைப் பற்றி சொன்னது இது, " இந்தியர்களின் வரலாறு என்பது, இந்தியர் அல்லாதவர்கள் இந்தியாவை ஆண்டதும் அழித்ததும் தான்."
சரி மீண்டுமந்த நாய் கம்பேரிஷனுக்கே வருவோம். நம்முடைய நாட்டு நாய்கள் எத்தனை - எத்தனையோ வகை இருந்தாலும், எத்தனை வலிமையாக சண்டை செய்தாலும் கடல் கடந்து வந்த வேற்றுநாட்டு நாய்களைத் தான் கண்கவர்ந்து வாங்குகிறோம்.
இதே போன்றவொரு கண்கவர்ச்சியில் தான் ஆரியக் கும்பலுக்கு நாமொரு காலத்தில் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது!
சிம்ம சொப்பனமாக, இருந்த இடத்திலேயே சில சோற்றுக் குண்டான்களை ஏப்பம் விடுகிறது, இந்த உயர்ரக நாய்கள். அதாவது, இருந்த இடத்திலேயே ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல் சுவர்கலோக அமைதியை அனுபவித்து, பணம் சேகரிக்கிற பார்ப்பன கும்பலின் அதே கபளீகரம் செய்கிற குணம்!
ஆனால் மறுமுனையில் உள்ள நம்முடைய பூர்வ குடிகளான நாட்டு நாய்களைப் பாருங்கள், ஒருவேளை சோற்றுக்கே ஓயாது ஓட வேண்டியிருக்கிறது. தன் பொழுதுகளை சொரிப்பிடித்த உடம்போடு சாக்கடைகளில் கழிக்க வேண்டியிருக்கிறது; அப்படியே அரிதாக உணவு ஏதும் கிடைத்தாலும் தன் இனத்துடனேயே அது சண்டையிட்டு வெற்றிக்கொண்டு பசியாற வேண்டியிருக்கிறது. இப்படியான வயிற்றுப்பசி போராட்டத்தில்தான் வர்ண பிரிவினைகள் ஏற்பட்டன போலும்.
கடந்த பத்தியில் நான் சொன்னது, 600-700 ஆண்டுகால ஆரிய - திராவிட வரலாற்றின் கையடக்க வெர்ஷன். இனக் கவர்ச்சியால் சொந்த அடையாளத்தையே இழந்து வருகிறோம். இந்தக் கோர முகத்தால் என்னவென்ன பிரச்சனைகளை சந்திக்கிறோம் என்று என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா?
அத்தனை விலை கொடுத்து வேற்று நாட்டு நாய்களை பகுமானமாக வாங்கி வீட்டில் வைக்கிறோமே, அவாக்கள் என்ன செய்து விட்டன?
வீட்டிற்கே ஒரு திருடன் வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் லொல்.. லொல்.. என்று தனக்கே உரித்தான ஆணவத்துடன் குரைக்கிறது. இதை நான் ஆணவம் என்றே பதிவு செய்ய விரும்புகிறேன். எஜமான விஸ்வாசம் என்பது முற்றிலும் வேறு. திருட வந்த அவன், அந்த நாயிற்கு பிடித்தமான பண்டமொன்றை வீசிவிட்டால் போதும் வாலைச் சுருட்டிக்கொண்டு திருடன் காலுக்குள் பதுங்கிக்கொள்ளும்.
பன்னெடுங்காலமாக ஆண்டுவரும் இந்த ஆரியக் கும்பலும் இதையேதான் செய்கிறது, அயல்நாட்டுக் கம்பெனிகளிடமிருந்து வரும் அழிவுத் திட்ட ஒப்பந்தங்களை பேரம் பேசி பைக்குள் போட்டு தொப்பை வளர்க்கிறது.
இவைகளுக்கு நம்மூர் கிளைமட்டும் ஒத்துவராது, நம்மூர் உணவும் ஒத்துவராது. நாய்களுக்கு உணவு வழங்கவே வெளிநாட்டு நிறுவனங்களை நாம் முதலீடு செய்ய அழைக்க வேண்டுமாம். இவர்கள் வயிறு வளர்க்க, நாம உயிர்களை இழக்க வேண்டுமாம்!
மறுமுனையில் உள்ள பசித்த ஏழை நாய்களுக்கோ, தெருவிற்குள் ஒரு புதுவாசனை வந்தாலே போதும். உடனே கூட்டங்கூடி ஒன்று சேர்ந்து குரைந்து, புதிதாக வருபவனை ஒரு பாடுபடித்திவிடும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் தோராயமாக 18-ம் நூற்றாண்டிலிருந்தே இதைத்தான் எங்கள் ஏழைக் கம்யூனிச இயக்கங்கள் செய்து வருகின்றன. இவர்களுக்கு பண்டமாசையும் பணத்தாசையும் காட்டி ஏய்க்க முடியாது!
சிலர் துப்பாக்கி ஏந்தி, அரசுக்கு எதிராகவே போராடுகின்றனரே! எதற்கு இம்சை முறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்..
வெகு நாட்களாகத் தெருவிலேயே தங்கிக் கிடந்த எங்கள் ஏழை நாய்களுக்கு போதிய ஊட்டச்சத்தை நீங்கள் வழங்காததால்; போதிய ஆரோக்கியத்தை நீங்கள் உறுதி செய்யாததால்; போதிய பாதுகாப்பை நீங்கள் வழங்க மறுத்ததால் வெரிப்பிடித்து அலைகிறோம்.
உங்கள் ஆரியக் கும்பலிடம் சொல்லிவையுங்கள், வீட்டிற்குள் ஒரு வீடு வைத்து, தனியாக தட்டு வைத்து, அதற்கென்று பண்ட பாத்திரங்களெல்லாம் பார்த்து வைத்து, இரும்புக் கதவுக்குள் பத்திரமாகத்தானே இருக்கிறோம் என்று வாய்க்கொழுப்பு எடுத்து திரியாதீர்கள்.
என்றேனும் ஒருநாள் நீங்கள் கழுத்துப்பட்டையை கலட்டிவிட்டு வெளியே வரத்தான் வேண்டும். அகோரப் பசியுடன் காத்துக் கிடக்கும் எங்கள் தெருநாய்க் கூட்டம், உங்கள் வேதம் சொல்வது போல நெருப்புக்கு ஆகுதி ஆக்கினாலும் சரி, எங்கள் நாட்டார் வழிபாடு சொல்வது போல இரத்தக்காவு வாங்கினாலும் சரி எதேனும் ஒன்றை நிச்சயம் செய்தேத்தீரும்!
அப்போது உங்கள் பூனூலை மட்டுமாவது பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள், இம்முறை உங்கள் மார்பில் அல்ல, கழுத்தில் கட்டிக்கொள்ள!
பதிவு : Satheesh Selva Kumar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக