செவ்வாய், 8 அக்டோபர், 2019

'Excuse me Mr.kandasamy' பாடல் விமர்சனம்

Excuse me Mr.kanthaswamy

ஏன் சார் இவ்ளோ சலிச்சுக்குறீங்க? திரைத்துறையில் தான் இருக்கீங்க! அதுவும் பாடலாசிரியர் வேற, தினம் தினம் புதுசு புதுசா நிறைய அனுபவம், ரசிக்கவும் கொண்டாடவுமே உண்டாக்கப்பட்ட வேலை. உங்களுக்கு என்ன சார் குறைச்சல்?

 அட ஏன்யா நீ வேற! உனக்கே என்னை எப்படி தெரியும்? எழுதின இரண்டு கவிதைத் தொகுப்பும் தமிழக அரசின் விருது வாங்கினதால தானே? அதுக்கே வேட்டு விழுந்துடும் போலயா!

 என்ன சார் சொல்றீங்க? ஆமாயா!  புதுசா வர முக்கால்வாசி இயக்குநர் டெம்ப்ளேட் வச்சுத்தான் கதை எழுதுறான். ஹீரோ இன்ட்ரோக்கு ஒன்னு, காதல் வந்த அப்றம் ஒன்னு, கலட்டிவிட்ட அப்றம் ஒன்னு, இடையில ஒரு ஐடம் சாங். இப்படியே போன ஒரே குண்டுச்சட்டியிலயே வாழ்க்கை போய்டும் போல! நீயே சொல்லு, "ஹீரோ பார்க்கிறான், ஹீரோயின் பார்க்கிறாள். இரண்டு பேருக்கும் காதல் வருது. அப்போ ஒரு பாட்டு வருது" இதே பேக்ரவுண்ட்ல தமிழ்-ல மட்டும் பல்லாயிர பாட்டு இருக்கும். இதோ சூழல் கொடுத்தா என்னதான்யா நாங்களும் எழுதுறது.

 ஹாஹ்ஹா! இது தான்‌ சங்கதியா? சார் ஆயிரமாயிர வருஷமா காதல் ஒன்னு தான். மாற்றம் மட்டும் தான் மாறாததுன்னு இல்ல. காதலும் தான் மாறாதது. என்ன! அது நிகழும் வழித்தடங்களை மட்டும் மாற்றிக் அமைத்துக் கொள்ளுது.

 நீங்க சொன்ன மாதிரி பேக்ரவுண்டுல, ஆயிரமாயிர பாட்டு போட்டாலும் கேட்க ஆள் இருந்தாங்க. இப்போ இருக்க பசங்களுக்கு பாட்டுக்குள்ள நீ என்ன சொல்ல வர, இதுல என்ன புதுசா இருக்குங்குற எதிர்பார்ப்பு தான் அதிகம் இருக்கு.

 காதல் பாடல் வெறும் வர்ணனையா மட்டும் இருந்தா போதாது, அதுல ஒரு செய்தி இருக்கணும்; நகைச்சுவை இருக்கணும். எதாவது ஒரு துணக்கு இருக்குமான்னு ஒவ்வொரு துணை வரியையும் தேடுறாய்ங்க பசங்க.
அப்படி 2009-ல வெளிவந்த ஒரு பாட்டு சொல்லட்டும்மா?

Lyricist viveka


சுசி கணேசன் இயக்கத்துல, விக்ரம் நடிச்சு வெளியான கந்தசாமி திரைப்படத்துக்கு தேவி ஶி பிரசாத் இசையமைத்திருப்பார்

அதுல இப்படியும்  ஒரு காதல் பாடல் எழுதலாம்னு, முன்னுதாரணம் காட்டி முன்வரிசையில் நிற்பார் பாடலாசிரியர் விவேகா. ஆமாங்க நான் சொல்ற பாடல் அதுதான். "எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி"

 கிட்டத்தட்ட இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு கால விழுமியங்களை, கால ஓட்டத்துக்கு ஏற்ப கடைசி வண்டியேற்றி கொண்டுவந்திருப்பார்.
தான் காதலிக்கும் அவனோ அவளோ தன்னை காதலிக்காது போனாலும், அவனோ அவளோ மரியாதைக்குரியவரே ஆவார். அதை தமிழுலகு வழங்கிவரும் அதே "மாண்புடைய மன்னவனே" போட்டு தொடங்கினால் முடிப்பதற்குள் சிகரெட்டும் கையுடன் தியேட்டர் வெளியில் ஒரு  பாசறை படர்ந்திரும். அதனால் அத்தனை லாவகமாக, தன் மன்னவனை முதலில் ஏய் என்று விளிக்கிறாள் அந்தப் பெண். ஒலிக்குறிப்பு கேட்டதும், மன்னவான கந்தசாமி(விக்ரம்) திரும்பி பார்க்கிறார் உடனே மிஸ்டர் என்று மரியாதை பதம் சேர்க்கிறாள்.

 அதன் பின் அவள், கொண்டு கூட்டும் மரபு தான் பண்பாட்டின் உச்சாணிக் கொம்பு. ஆம்! பொதுவாக பெண் பார்க்கும் நிகழ்வு என்பது ஆண் தன் சுற்றத்தார் சொந்தங்கள் என் பெறும் புடை சூழ, பெண் வீட்டிற்கு காபி குடிக்கும் நிகழ்வின் பொருட்டாய் ஆற அமர குசலம் விசாரித்து பின் பெண்ணவளை கண்ணது காண, பெண்ணவளின் கண் மண்ணதனையும் மன்னவனையும் காண, இறுதி தீர்ப்பு தபால் வழியோ தாம்பலத்தின் வழியோ அனுப்பப்பட்டு முற்றுப்பெறும்.

அந்த மரபை தான், ஸ்ரேயா பாடுகிறாள். "ஒரு காபி குடிப்போம், கம் வித் மீ" அதிலும் சர்க்கரை அதிகமாகவா குறைவாகவா என்றும், காபி வேண்டுமா டீ வேண்டுமா என்றும் கூட கேள்விக் கேட்காத பழைய பண்பாட்டை உடைத்தெறிந்து "ஹாட் காபி வேண்டுமா, கூல் காபி வேண்டுமா" என்று கியாஸ்வலாக கேட்கிறார்.

இந்த பண்பாட்டின் எச்சங்களை அடுத்து வரும் பத்தியிலும் பரவ விடுகிறார் பாடலாசிரியர். அந்த காலத்தில் பெண்ணை பார்க்கும் ஓரிரு நிமிடங்கள் தான் முடிவெடுக்கும் முக்கியக் குறிப்புகளை வாரி வழங்கும். யார் இவன்(ள்), எப்படி பட்டவர், இருவரின் பழக்க வழக்கங்கள் ஒத்துப் போகுமா? என்பதை ஆராய்வதற்கெல்லாம் வழி இல்லை. அதற்கான வழியை இந்தப் பாடலின் மூலம் சமைத்துக் கொடுக்கிறார் ஸ்ரயோ. ஆம் "ஒரு லாங் டிரைவ் போலாம் கம் வித் மீ!"

அது ஸ்லோவோ ஸ்பீடோ, நீ விரும்பியப்படியே ஓட்டிக்கொள், உனக்கு விரும்பியப் படி நான் இருப்பேன் என்று தன் ஒருதலைக் காதலை ஓரஞ்சாரமாக ஒப்பனைக் கூட்டி அள்ளிக் கொடுக்கிறார் தன் கண்ணாளனுக்கு.

கொஞ்சம் ஹை-டெக்கியாக வலம் வரும் விக்ரம். அவளை நிராகரிக்க பயன்படுத்தும் வார்த்தைகள், அவனின் தத்துவார்த்த ரீதியான கேரக்டரை படிக்க நம்மை பயணப்படுத்தும். "ஓட்ட சிம் கார்டு, எம்ப்டி ஐபாட்" என்று ஒன்னுமில்லாத சரக்காக அவளை பாவனை செய்கிறான்.

 அத்துடன் நின்றிருந்தால் சராசரியான பாடலாசிரியர் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்திருப்பார். ஆனால் விவேகா மேலுமொரு படி சென்று, சமகாலத்தில் பரவலாக பேசப்பட்ட சம்பவங்களை காதலுக்கு ஏற்ப கதைத்திருக்கிறார்.

 எங்கு போனாலும் துரத்தி வரும் ஹட்ச் டாக் என்பதை "ஹட்ச் புல்டாக்கே நச்சு கீழ்பாக்கே" என்று பாடுகிறார். நில்லுங்க நில்லுங்க. நச்சரிக்கும் கீழ்பாக்கமே என்று அவர் ஆகுபெயரை வெளிப்படுத்த பயன்படுத்திய சொல்லாடல் சுவையானது.

 இடையில் ஸ்ரேயா, மண் ரோடான என்னை மெயின் ரோடாக்க எப்போது வருவாய் என்று புலம்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தன் ஆணார்ந்த அடக்க ஒடுக்கங்களை பக்குவமாக பார்த்துக் கொள்கிறார் விக்ரம்.

 எனினும் அவளின் சோகம் தாளாமல், சமாதானம் செய்யும் முயற்சியில் அழைக்க பயன்படுத்தும் சொல் நுட்பமானது. அவள் மேல் காதல் இல்லாத துள்ளியத்தை நம்மிடம் மறைமுகமாக சொல்லிவிட விக்ரம் வழியாக பாடலாசிரியர் எத்தனிக்கிறார். "எக்ஸ்கியூஸ் ளீ 'மிஸ்' சுப்புலட்சுமி" என்று அவனின் மிஸஸ்ஸாக இருந்தவளை மிஸ் இட்டு அழைக்கிறார். பின் சராசரியாக கொட்டித் தீர்க்கும் நடுத்தர ஆணின் சொற்களை சிந்தி அந்த சரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

இதை போல அங்கங்கு.. தேவைப்படும் இடத்தில் மட்டும் பயன்பாட்டில் உள்ள சாதாரண வழக்குகளை பயன்படுத்துவது பெரும் கரும்புள்ளியாக தோன்றாது.

இதன் பின் தான், பாடலாசிரியர் தன் தனித்துவத்தைக் காட்சிப்படுத்த தங்க ரிப்பன் கத்தரித்து வரவேற்கிறார். காதல் பாடலில் அரசியல் பேசலாமா?! ஆம் பேசலாம். அதெப்படி?

"கடவுள் இல்லன்னு சென்னா'ர்' ராமசாமி, காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி" என்று பெரியாரை முன்னிறுத்தி தன் காதல் குறித்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகிறார் விக்ரம். அதிலும் சூட்சுமமாக  அர் விகுதி சேர்த்து சிறப்பு பெறுகிறார். ஆனாலும் 'சாமி' இல்லன்னு ராம'சாமி' சொன்னாருங்களா!? ன்னு யோசிக்கவும் வைக்கிறாரோ?

சரி காதலுக்கு வா.. நீ சொல்றதெல்லாம் ஒப்புக்க மாட்டேன்டி என ஸ்ரேயா ஸ்ட்ராங்காக நோபா(no_pa) நோபா நோபா சொல்கிறார். நீ பெரியாரை முன்னிலைப்படுத்தினால் நான் திராவிடம் முன்னிறுத்தின திருவள்ளுவரையே துணைக்கு அழைப்பேன் டா! என வலு சேர்கிறார். "ஊடல் தாண்டி கூட சொன்னார் கடைசிக் குறளில் ஸார்ப்பா" என்று 'குத்தி'க்காட்டுகிறார்.

அரசியல் பேசியதும் என்னவோ விக்ரமுக்கு நாமம் போடும் நியாபகம் வந்துவிட்டதோ.. "வேணாம் வேணாம் வேணாம் நீ நாமம் போட வேணாம் உன் கூட வந்தா சண்ட போட்டே வாழ்க்கை போகும் வீணா" என‌ எச்சரிக்கிறார்.

அடடடா என லயத்துப் போய்விட்டீரா? இதென்ன காதல் பாட்டின் முற்றமொரு அத்தியாயமா என்று வியக்கிறீரா? மூச்சை இழுத்துப் பிடிச்சிங்கோங்க இன்னும் திகட்ட வருகிறார் பாடலாசிரியர்.

தன்னை ஒருதலையாக காதல் பேசி பேசி இம்சித்து வரும் பெண்ணை வேறொரு கோணத்தில் திட்டுகிறார். அதனோடு பாடலை கேட்பவர்களுக்கு ஒரு வரலாற்றுத் தீனிப் போடுகிறார். "ஹிட்லர் பேத்தியே... ஹிட்லர் பேத்தியே காதல் ஒன்னும் யூதன் அல்ல கொல்லாதே" என்று செல்லமாகத் தீண்டுகிறார்.

ஸ்ரேயா என்ன குறைந்தவரா? நீ ஜெர்மனி என்றால் நான் உன்னை கொன்ற அமெரிக்கா டா! என்று மார்தட்டிக் கொண்டு உத்தமர் ஆபிரகாம் லிங்கனை மெச்சுவது போல விக்ரமை ஏசுகிறார். "லிங்கன் பேரனே... லிங்கன் பேரனே… தத்துவங்கள் பேசி பேசி கொல்லாதே" என்றதோடு நில்லாமல் "காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான், தீராது டிஷ்யூம் தான்" என்று துருவம் பிரித்து சண்டையிடுகிறார். இதில் மட்டும் எத்தனை வரலாற்று துணுக்குகள்!

இதனூடாக, விவேகா வரைந்து கொண்ட சில சொற்கள் தாறுமாறானது. உப்பு மூட்டை என்பதற்கு டக்(duck) மூட்டை என்ற எதிர்பதம் எல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டு தான்.

இப்படிபட்ட பாடல்கள் தான் இனி காலங்கடந்தும் நில்லும்.


கீழே இருக்கும் இணைப்பை பயன்படுத்தி, உங்களுக்கும் இந்த பாடல் இதே உணர்வுகளை தருதான்னு பாருங்களேன்.!

கருத்துகள் இல்லை:

அவ்ளோதான் இந்தியா!

 மக்களை விட கடவுள் பெருசு என்று பேசுகிற நாடுதானே இது? தாழ்த்தப்பட்ட தலீத்தைவிட பூனூல் அணிந்த பிராமணனே பெருசு என்று பீத்துகிற தேசந்தானே இது? ...